அதிமுகவுடன் கூட்டணி இல்லை.! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகம்

Published : Nov 18, 2024, 12:21 PM ISTUpdated : Nov 18, 2024, 12:27 PM IST

தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற செய்தியை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், மக்கள் ஆதரவுடன் ஆட்சியமைப்பதே கட்சியின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகம்
vijay eps stalin

திராவிட கட்சிகளுக்கு போட்டியாக விஜய்

தமிழகத்தில் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டும் கடந்த 50 ஆண்டுகாலமாக ஆட்சி அமைத்து வரும் நிலையில், இந்த கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் களத்தில் குதித்துள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியவர் தனது முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்துள்ளார்.

எனவே வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் இலக்காக கொண்டுள்ள நடிகர் விஜய், எந்த கட்சியோடு கூட்டணி செல்வார் என தற்போதே விவாதிக்க தொடங்கப்பட்டுள்ளது.
 

25
Thalapathy

அதிமுகவுடன் கூட்டணியா.?

அந்த வகையில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணியானது தமிழக வெற்றிக்கழகம் அமைக்கும் என செய்திகள் பரவியது. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் 80 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் கேட்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

35
Bussy anand

பொய்யான தகவல்

வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.  மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

45

மக்கள் புறக்கணிப்பார்கள்

இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

55
vijay

பெரும்பான்மையோடு நல்லரசு அமையும்

கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். எனவே உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories