தீபாவளி கொண்டாட்டம்
சொந்த ஊரில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் வெளியூருக்கு பிழைப்புக்காக வந்தவர்கள் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். பண்டிகை காலத்தில் மட்டும் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு சென்று உறவினர்களோடு பண்டிகைகளை கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு செல்வார்கள். அந்த வகையில் ரயிலில் முன்பதிவு செய்தும், பேருந்தில் முன்பதிவு செய்தும் பயணம் மேற்கொள்வார்கள்.