மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து செல்வமணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ், யோகேஸ்வரன், சஞ்சய், தினேஷ்குமார் மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.