ஓராண்டு சிறை- தண்டனை நிறுத்தம்
எனவே இந்த வழக்குகளில் எச். ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் எச்,ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எச் ராஜாவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.