தமிழகத்தில் நாளை மே 26ம் தேதி (செவ்வாய்கிழமை], 27ம் தேதி (புதன்கிழமை], 28ம் தேதி (வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம்), 29ம் தேதி (வெள்ளிகிழமை முகூர்த்தம்), 30ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 31ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை] வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை, மதுரைக்கு சிறப்பு பேருந்துகள்
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துச் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26ம் தேதி (செவ்வாய்கிழமை அன்று 475 பேருந்துகளும், 27ம் தேதி (புதன்கிழமை) அன்று 845 பேருந்துகளும் 28ம் தேதி வியாழக்கிழமை, 29ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 30ம் தேதி சனிக்கிழமை ஆகிய நாட்களில் தினசரி 455 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.