இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் ஜோதிராமன் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முன் ஜாமின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார் ஆதரவாக வழக்கறிஞர் வாதிடுகையில், கரூர் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல விபத்து எனவும் இந்த சம்பவத்தில் எஃப் ஐ ஆர் தவறான தகவலை போலீசார் பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் எங்களுடைய தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லையெனவும், கரூர் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல நடந்தது விபத்து என வாதிடப்பட்டது. வேண்டுமென்றே மக்களை காக்க வைத்து தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது போல் கூறப்படுகிறது.