போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் மேற்கு வங்கத்தையும், மற்றொருவர் சென்னையையும் சேர்ந்தவர்கள் என்றும்,தேனியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், இந்த இளம் பெண்களை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற வீரபாண்டி மேலத்தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (27),பாண்டி மகன் குணால் (28), உதயகுமார் மகன் ஹரிஹரன் (21)ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.