பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி.! அண்ணாமலை சொன்ன பரபரப்பு தகவல்

Published : Sep 09, 2025, 08:34 PM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

PREV
14

தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி அணியை தமிழக பாஜக தலைமை கண்டு கொள்ளவும் இல்லை, 

மதிக்கவும் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என தெரிவித்தார்.

24

இந்த சூழ்நிலையில் பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி இணைய வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணியில் (ஓபிஎஸ்- டிடிவி ) இருவரும் கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் இருவரிடமும் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது அதைத்தான் சொல்கிறேன். 

டிடிவி அண்ணனிடம் இதைதான் வலியுறுத்திருக்கிறேன். கருத்து சொல்லப்பட்டு விட்டது நயினார் நாகேந்திரன் பேசிவிட்டார் மீண்டும் அதை நோண்ட வேண்டாம் அது அழகல்ல. காலம் கனிந்து வரட்டும். பொறுத்திருங்கள் என தெரிவித்தார்.

34

இதனை தொடர்ந்து தவெக தலைவரின் ஒரு நாள் பிரச்சார பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியிருக்கிறார். 24 மணி நேரம் செய்யக்கூடியது தான் கவர்னன்ஸ் பாலிடிக்ஸ். கட்சி தலைவராக 24 மணி நேரமும் இருக்க வேண்டும். 

தமிழக வெற்றிக்கழகம் தங்களை ஒரு சீரியசான கட்சி என்று சொல்கிறார்கள். அதே வேகத்தை 24 மணி நேரம் பார்க்க வேண்டும். சனிக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன், ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன் வார நாட்களில் பார்க்க மாட்டேன் என்பது சரியில்லையென தெரிவித்தார்.

44

காவல் துறையைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் அனுமதி மறுப்பதாக சொல்கிறார்கள் நாங்கள் யாத்திரையில் நடத்தும் போதும் அனுமதி மறுத்தார்கள். எதிர்க்கட்சியாக இருப்பது அதற்கு இதுபோன்ற எதிர்ப்புகள் வரும். அப்படி காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம். 

தமிழக வெற்றி கழகத்தை பார்த்து திமுக எப்போது பயப்படும் என்றால் முழுமையாக அரசியல் களத்திற்கு வந்தால் தான். ஒரு இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால் அரை கிலோமீட்டர் தள்ளி வையுங்கள் மக்கள் வருவார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories