அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா.? ஜனவரியில் தேர்வா.? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

Published : Dec 04, 2024, 12:11 PM ISTUpdated : Dec 04, 2024, 12:27 PM IST

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாதிப்பின் அளவை மதிப்பிட்டு, தேர்வு குறித்த முடிவை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம்.

PREV
14
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா.? ஜனவரியில் தேர்வா.? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
Puducherry Rains

அரையாண்டு தேர்வு தேதி மாற்றமா.?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய தேர்வு அரையாண்டு தேர்வாகும். அந்த வகையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு மாணவர்களுக்கு  டிசம்பர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக பல இடங்களில் தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பள்ளியில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மாணவர்களின் புத்தகமும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. 

24
school exam

மழையால் பாதித்த பள்ளிகள்

இதனையடுத்து அரையாண்டு தேர்வுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் குறிப்பிட்ட தேதியில் தேர்வு நடைபெறுமா.? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் ஏற்பட்ட சேத விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் மழை வெள்ளத்தால் இடிந்துள்ள பள்ளி கட்டிடங்களின் நிலையையும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

34
anbil mahesh

பள்ளிகளில் பாதிப்பு என்ன.?

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதியிலிருந்து செய்முறை தேர்வுகள் நடைபெற வேண்டிய காலம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் மாவட்டங்களில் அரையாண்டு செய்முறை தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க கூறியுள்ளோம். 

மாணவர்களின் நலன் தான் முக்கியம். எந்த எந்த மாவட்டத்தில் எந்த  அளவில் பள்ளிகளில் மழை பாதிப்பு உள்ளது.? மின்சார பிரச்சனை உள்ளதா.? உள்ளே நுழையமுடியாத நிலை உள்ளதா என்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. அதன் படி தலைமை ஆசிரியர் மூலமாக தகவல் பெற்று தேர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.  

44

ஜனவரி மாதம் தேர்வு.?

9ஆம் தேதிக்குள் வெள்ள பாதிப்பு சரி செய்யப்பட்டு விட்டது என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவே உறுதி செய்யப்படும். இன்னமும் தண்ணீர் தேங்கியுள்ளது என தெரியவந்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சரி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்..

ஒரு தேர்வோ அல்லது இரண்டு தேர்வோ நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் சேர்த்து ஜனவரி மாதம் முதல் வாரம் நடத்தப்படும்.  இப்போது 9ஆம் தேதி நடைபெறுகின்ற அரையாண்டு தேர்வு தேதியில் மாற்றம் இல்லை. எங்கெல்லாம் நடத்த முடியாத சூழல் உள்ளதோ அங்கு மட்டும் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என கூறினார். 

Read more Photos on
click me!

Recommended Stories