ஆகவே 2026 தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணி வைக்க வேண்டும். இரண்டும் கூட்டணி வைத்தால் தான் வன்னியர் வாக்குகளை பெற முடியும். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்காமல் போனால் வன்னியர் மாவட்டங்களில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். பெருபான்மையான வன்னியர் தொகுதியில் இரண்டாவது இடத்தைக் கூடப் பெற முடியவில்லை. விழுப்புரம், சேலத்தில் டெபாசிட்களை இழந்தது. சிதம்பரம் தொகுதியில் தனது கூட்டணி கட்சிகளுக்கு டெபாசிட் உறுதி செய்யத் தவறிய பாமக, கள்ளக்குறிச்சியில் நான்காவது இடத்தைப் பிடித்தது. பாஜக கூட்டணி பாமகவை தக்க வைப்பதற்கு முன்பே, அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். ராஜ்யசபா போன்றவற்றில் பாமகவிற்கு அதிக இடங்களை வழங்க வேண்டும்.