இது தொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள் சமூக வலைதளப்பதிவில், “மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறித்து, ஊடக அறத்திற்கு முற்றிலும் விரோதமாக அவதூறு செய்தி வெளியிட்டு பரப்பிய பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் மீது கழகத்தின் சார்பில் சட்ட நடவடிக்கை தொடுப்பதற்கான முதல் படியாக Legal Notice அனுப்பப்பட்டுள்ளது.
திமுக சார்பு நிலைப்பாடு கொண்டு, பத்திரிகையாளர் என்ற போர்வையில், மக்கள் நம்பும் ஊடகத்தை கருவியாகக் கொண்டு திமுக-வின் Narrative-களை சுமக்கும் கொத்தடிமைகளை அஇஅதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.
"மக்களாட்சியின் நான்காம் தூண்" என்ற பெயருக்கு இலக்கணமாகத் திகழ வேண்டிய ஊடகங்கள், ஒரு கட்சியின், அதுவும் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துள்ள திமுக-வின் Agenda Carriers-ஆக செயல்படுவது, தங்களை நம்பும் தமிழக மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் என்பதை உணர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.