எம்ஜிஆரை புகழ்ந்த அண்ணாமலை
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள்.