ஜல்லிக்கட்டு போட்டி
பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து மக்களுக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டியாகும், அந்த வகையில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது. பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும். இந்த போட்டியில் 1000க்கும் மேற்பட்ட காளைகள், இளைஞர்கள் கலந்து கொள்வார்கள்.
உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டின் படி கடுமையான விதிமுறைகளை செயல்படுத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. மாடு பிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும். சிறந்த காளை மற்றும் சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு கார், பைக் என பரிசுகள் வழங்கப்படும்.