எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்கள் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசுக்கு சப்ளை செய்ய உள்ளன. மடிக்கணினி மாதிரி மற்றும் அதில் இடம்பெறும் தொழில்நுட்ப அம்சங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இறுதி செய்தார். மூன்று நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு இந்த மடிக்கணினிகளை கொள்முதல் செய்கிறது.
மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் அந்தத் திட்டத்தை எப்போது தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் துணை முதலமைச்சர் தலைமையிலான குழு கூடி முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.