வட கிழக்கு பருவமழைக்கு குட் பாய்.! தமிழகத்தில் இனி வெயில் தானா.? வானிலை மையம் அப்டேட்

Published : Jan 24, 2025, 03:17 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
14
வட கிழக்கு பருவமழைக்கு குட் பாய்.! தமிழகத்தில் இனி வெயில் தானா.? வானிலை மையம் அப்டேட்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்தது. நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியது. இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நாட்கள் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

24

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  இன்று மற்றும் நாளை (24-01-2025 மற்றும் 25-01-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

34
Heavy Rain

ஜனவரி 26ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். எனவும் இதனை தொடர்ந்து  29-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

44
rain temperature rise

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

நாளை (25-01-2025): வானம் ஓரளவு காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories