தமிழகத்தில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதங்களில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் உள்ளிட்ட கோவில் திருவிழாக்கள் வரிசைக்கட்டி வரும். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதால் ஒரே கொண்டாட்டம் தான். இதில் குறிப்பிட்ட மாவட்டங்களில் திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.