மிஸ் பண்ணாதீங்க.! ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... சூப்பரான திட்டம்- தேதி குறித்த தமிழக அரசு

Published : Oct 10, 2025, 07:00 AM IST

தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

PREV
15
தமிழகத்தில் ரேஷன் கடைகள்

ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரேஷன் கடைகளில் மானிய விலையிலான வழங்கப்படும் உணவுப்பொருட்கள். அந்த வகையில் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. . எனவே அந்த உணவுப்பொருட்களை பெறுவதற்கு ரேஷன் அட்டை மிகவும் முக்கியம்.

 மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ள பாதிப்பு காலங்களில் நிவாரண உதவி வழங்கவும் ரேஷன் அட்டை முக்கிய சான்றாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 33,222 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

25
ரேஷன் அட்டையில் மாற்றம்

இது மட்டுமில்லாமல் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கியம். எனவே புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்து பல லட்சம் பேர் காத்துள்ளனர். மேலும் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் உணவு பொருள் துறை அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. 

இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (11.10.2025) சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

35
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 அதன்படி அக்டேபார் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதே போல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ரேஷன் கார்டு திருத்த முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
முதியோர்களுக்கு அங்கீகாரச் சான்று

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள்,

55
சிறப்பு முகாமில் தீர்வு

தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories