ராமநாதபுரத்தில் கார் விபத்து
நெடுஞ்சாலை விபத்துக்கள் நாள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலை விபத்தின் மூலம் மட்டுமே ஒரு மாதத்தில் மட்டும் பல ஆயிரம் பேர் இறந்து வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கச்சிமடத்தில் நகை கடை உரிமையாளரின் குடும்பத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து இரவு நேரத்தில் தங்கச்சிமடத்திற்கு திரும்பியுள்ளனர்.