திருச்சியில் இருந்து திருப்பதி பயணம்
அந்த வகையில் திருச்சியில் இருந்து திருப்பதி சென்று பக்தர்கள் பேருந்து விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதி தரிசனத்திற்காக நேற்று முன் தினம் தனியார் பேருந்தில் சுற்றுலாவாக வந்தனர். நேற்று இரவு தரிசனம் முடித்துக்கொண்டு சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட டிப்பர் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.