TNEB: 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு! மின்வாரிய அதிகாரிகளின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பு இல்லை! ஊழல் ஆதாரங்களை அழிக்க நடந்த சதியா?

Published : Jun 04, 2026, 01:38 PM IST

Hard Disks Stolen: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன. இது ஊழல் ஆதாரங்களை அழிக்கும் சதியாக இருக்கலாம்.

PREV
15
சென்னை மின்வாரியத் தலைமையகம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல் முதல் டெண்டர், ரகசிய ஆவணங்கள் வரை இருப்பதாகவும், இந்த திருட்டு கடந்த மே 16, 17-ம் தேதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த திருட்டு நடந்திருக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

25
18 ஹார்டி டிஸ்க்குகள் திருட்டு

அதில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டி டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுத்துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் நீண்டகாலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

35
அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை

திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும் என்று ஐயங்கள் எழுந்துள்ளன. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது.

45
கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை

தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில் மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

55
ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்?

தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின்துறை மிகவும் முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா? ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories