10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை. தேர்வுத்துறை கருதினால் தேர்வு பணிகளிலும் நியமிக்க வேண்டாம்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பறக்கும் படை (Flying Squad) உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
24
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம்
இதுதொடர்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்: மார்ச் மாதம் தொடங்க உள்ள மேல்நிலைபள்ளி பொதுத்தேர்வு பணிகளில், அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணிகளில் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அவர்களைப் பறக்கும் படை பணிகளில் நியமிக்கத் தேர்வுத் துறை முன்வருவதில்லை.
34
பறக்கும் படை
பொதுத்தேர்வுப் பணிகளில் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்று தேர்வுத் துறை கருதினால், அவர்களை அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்தவொரு தேர்வு பணிகளிலும் நியமிக்க வேண்டாம் என சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதால், அவர்களை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை மற்றும் அறை கண்காணிப்பாளர் ஆகிய இரு பணிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைத் தேர்வுத் துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.