நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் தினமும் பொதுமக்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக மாதம்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.