அந்த வகையில் இன்று மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கி உள்ளது. வருவாய்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து வைக்க வீரர்கள் உறுதிமொழி ஏற்போடு போட்டி தொடங்கியது.
மொத்தமாக 10 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 50 முதல் 70 வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர். முதலாவதாக கோவில் காளை அவிழ்க்கப்ட்டதும் வரிசையாக அடுத்தடுத்த காளைகள் களம் இறக்கப்படுகின்றன. மொத்தமாக 1000 காளைகளும், 900 வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர்.