மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 17, 2026) மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மதுரையில் திரண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோயிலில் சிறப்பு பூஜைகள் தொடங்கின. அதிகாலை 3.35 மணி முதல் 5.45 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 12-ம் கால யாகம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நடைபெற்றன.
இதையடுத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் காலை 7.40 மணிக்கு நடைபெற்றது. கோயிலின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
meenakshi thirukalyanam 2026 மீனாட்சி திருக்கல்யாணத்தில் இந்த அம்மனை கவனிச்சீங்களா? யார் இந்த பிரியாவிடை?