சென்னை மடிப்பாக்கத்தில் வாகன போக்குவரத்து போலீசார் மேகநாதன் (35) என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கார் ஒன்று சாலையில் அங்கும் இங்குமாக சென்றது. கார் ஓட்டுனர் போதையில் இருப்பதை அறிந்த போலீசார் மடக்கியுள்ளனர். ஆனால், நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனைத்தொடர்ந்து காவலர் மேகநாதன் இருசக்கர வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்றுள்ளார்.