Pachaiyappa College: 184 ஆண்டுகால வரலாற்றில் பச்சையப்பன் கல்லூரி புதிய சாதனை! இனி மாணவிகளுக்கும் அனுமதி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

Published : Jun 17, 2026, 09:32 PM IST

Tamilnadu Government: 184 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இருபாலர் கல்வி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கிறது. 

PREV
15
தமிழ்நாடு அரசு

இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரி, அதன் 184 ஆண்டுகால சிறப்புமிக்க பயணத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு, அரசாணை (G.O. No.100 dated 15.06.26) மூலம் கல்லூரிக்கு இருபாலர் (Co-Educational) அந்தஸ்தை வழங்கியுள்ளது.

25
பச்சையப்பன் கல்லூரி புதிய சாதனை

1842 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி பல தலைமுறைகளாக கல்விச் சிறப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் கல்விச் சேவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதுடன், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் கல்வி எதிர்பார்ப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

35
இனி மாணவிகளுக்கும் அனுமதி

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, மாணவிகளுக்கும் இந்நிறுவனத்தின் வாயில்களைத் திறந்து வைத்து தரமான உயர்கல்விக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத் தன்மையும் உயிர்ப்பும் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கும். கல்லூரியின் பாரம்பரியத்தையும் பெருமைமிகு மரபையும் பாதுகாத்தபடியே, நவீன கல்வி மதிப்புகளுக்கு இம்முயற்சி உறுதுணையாக அமைகிறது.

45
கல்லூரி நிர்வாகம் நெஞ்சார்ந்த நன்றி

தமிழ்நாடு அரசின் இந்த முடிவை, பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் வரவேற்றுள்ளனர். இந்தச் சாதனை, பல்வேறு தரப்பினரின் நீண்டகால முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

55
இருபாலர் அந்தஸ்து

கல்லூரியின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் அங்கீகரித்து, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்கு கல்லூரி தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. புதிய அத்தியாயத்தை நோக்கி முன்னேறும் பச்சையப்பன் கல்லூரி, அறிவு, நற்பண்பு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான தனது பணியில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நிர்வாகச் சாதனை மட்டுமல்ல; மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக சமூகத்திற்கு சிறப்பாகச் சேவை செய்துவரும் இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியபடி, முன்னேற்றமிக்க எதிர்காலத்தை உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். "புகழ்மிகு பச்சையப்பர் பாரம்பரியத்தைப் போற்றுவோம்; அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்குவோம் என முனைவர் பேபி குல்னாஸ் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories