நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனா, சின்னக்கல்லாறு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், விண்ட் வொர்த் எஸ்டேட், தேவாலா, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
இது தவிர தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை வரை தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.