தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, மதுரை, அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். புயல் தாக்கத்தால் அடுத்த 2 நாட்களில் தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மழை தொடர வாய்ப்பு உள்ளது.