அவர்களிடம் இருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைதானவர்களில் பிரவீன், கிஷோர், தனுஷ், பிளம்மிங் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் 250 கிராம் எடையுள்ள மெத்தப்பெட்டமைன் எனும் போதைப்பொருளை வாங்கியுள்ளனர். இதை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அருண் என்பவரிடம் 250 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைனை ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். பின்பு அதனை 1 கிராம் 2000 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர். ஆனால், அவை அனைத்தும் போலியானது என வாங்கியவர்கள் கூறியதால் 4 பேரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: TNPSC Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!