இந்நிலையில், சென்னையில் நேற்று அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. வடபழனி, கிண்டி, தி.நகர், கோடம்பாக்கம், பாரிமுனை, நெற்குன்றம், கொளத்தூர், காசிமேடு, வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, புழல், அமைந்தகரை என சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அம்பத்தூரு, கொரட்டூர், கத்திவாக்கம், திருவெற்றியூர் என புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மக்கள் திக்குமுக்காடி போனார்கள்.
ஒரு மணி நேரத்தில் 16 16 செ.மீ மழை
சென்னையின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. மணலியில் ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ மழை பெய்துள்ளது. கொரட்டூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக எடுத்துக் கொண்டால் மணலியில் 26 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் பெய்த தொடர் மழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பின. மேலும் 15க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது.