அப்போது மேம்பாலத்தின் எதிர் திசையில் தலைகவசம் அணிந்து சென்ற சக வாகன ஓட்டி ஒருவர் மீது பைக் ரேஸில் ஈடுபட்ட வாகனம் ஒன்று மோதியதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில், பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் எதிர்திசையில் வந்த ராயப்பேட்டையை சேர்ந்த குமரன்(49) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.