மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்பிசி அணி தொடர் தோல்வியை சந்தித்து இருக்கிறது. சொந்த மைதானமான பெங்களூருவில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு Women's Premier League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், மகளிர் ஐபிஎல்லின் 14வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.