முகமது ஷமிக்கு சோதனை
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அர்ஷ்தீப் சிங் என்ற ஒரே ஒரு பிரதான பாஸ்ட் பவுலருடன் தான் களமிறங்கியது.
காயத்தில் இருந்து குணமடைந்து ஓராண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முகமது ஷமி பிளேயிங் வெலனில் இடம்பெறவில்லை. முகமது ஷமி விளையாடாததது குறித்து கேப்டன் சூர்யாகுமார் யாதவ்வும் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் ஷமிக்கு என்னதான் ஆயிற்று? பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்றால் பிறகு ஏன் அணியில் எடுக்கப்பட்டார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.