இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், இந்தியாவில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக பிரபலமான வீரராக விளங்கி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது அசத்தலான பேட்டிங் மூலம் ரன்களை குவித்து வரும் சுப்மன் கில், பிசிசிஐ கொடுக்கும் சம்பளம் மட்டுமின்றி பல்வேறு முன்னணி பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.
தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல வழிகளுக்கும் பயன்படுத்தி வருகிறார் கில். இந்நிலையில், மொஹாலியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை சுப்மன் கில் நன்கொடையாக அளித்துள்ளதாக ஆன்லைன் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது வென்டிலேட்டர்கள், சிரிஞ்ச் பம்புகள், ஓடி மேசைகள், சீலிங் லைட்டுகள், ஐசியு படுக்கைகள் மற்றும் எக்ஸ்ரே இயந்திரங்கள் என ரூ.35 லட்சம் மதிப்புடைய முக்கியமான உபகரணங்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
கம்பீரின் நெருங்கிய நண்பர்! இந்திய அணி உதவி பயிற்சியாளரை தூக்கி எறிந்த பிசிசிஐ! என்ன காரணம்?