யாரை பார்த்தும் எங்களுக்கு பயம் இல்லை யாரா இருந்தாலும் மோதி பாக்க ரெடி ISL நார்த்ஈஸ்ட் யுனைடெட் கோச் வீராவேசம்

First Published Nov 24, 2020, 12:42 PM IST

தொடர்ந்து தொடர் முழுவதும் போராடும் அணியாக இருப்போம் என்றும் அதற்கான ஆரம்பம்தான் மும்பை சிட்டி அணிக்கு எதிரான வெற்றி என்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் தலைமை கோச் தெரிவித்துள்ளார்.
 

இரண்டாவது ஐஎஸ்எல் போட்டியில் மும்பை சிட்டி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைனெட் அணி மும்பை சிட்டி அணியை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றி குறித்து நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணயின் தலைமை கோச் ஜெரார்ட் நஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
undefined
சிறப்பான மும்பை சிட்டி அணியிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்கக்லாம் என்ற திட்டமிடலுடன் போட்டியை எதிர்கொண்டோம்
undefined
திட்டத்துடன் போட்டியை மிகவும் சிறப்பாக நமது வீரர்கள் விளையாடினர். விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் கூட வெளியிலிருந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாட ஊக்கம் அளித்தனர் என்றார் அவர்.
undefined
ஐஎஸ்எல் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பேசிய அவர், இந்த தொடர் நார்த்ஈஸ்ட் அணிக்கு மிகவும் சிறப்பாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
undefined
தொடர்ந்து தங்களை பலப்படுத்திக் கொள்வோம் என்றும் கூறினார். முதல் நாளில் இருந்தே வெற்றிக்காக போராட உள்ளதாகவும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் போட்டியை அணுக மாட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
undefined
click me!