தோல்விக்கு பொறுப்பேற்ற தோனி
இதுவரை படுதோல்வியை சந்தித்து வந்த சிஎஸ்கே, நேற்றைய போட்டியில் போராடி தோற்றதால் ரசிகர்கள் ஓரளவு ஆறுதல் அடைந்தனர். இந்த போட்டிக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி தோல்விக்கு நானே பொறுப்புபேற்றுக் கொள்கிறேன் என்றார். இது தொடர்பாக பேசிய அவர், ''கடைசியில் சில ஷாட்களை ஆடி அழுத்தத்தைக் குறைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்தபடி நடக்கவிலை. அதனால் நான் அதற்குப் பழியை ஏற்றுக்கொள்கிறேன். டெத் ஓவர்களில் ஷெப்பர்ட் சிறப்பாக பேட்டிங் செய்தார். நாங்கள் என்ன தான் பந்து வீசினாலும், அவரால் அதிகபட்ச ரன்களை அடிக்க முடிந்தது'' என்று தெரிவித்தார்.
யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும்
தொடர்ந்து பேசிய தோனி, ''நாங்கள் அதிக யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும், பேட்டர்கள் அடிக்கத் தொடங்கும்போது, நீங்கள் யார்க்கர்களை அதிகம் நம்பியிருக்க வேண்டும். யார்க்கரை சரியாக போட முடியாவிட்டால், லோ ஃபுல் டாஸ் அடுத்த சிறந்த விருப்பமாகும். பதிரனா போன்ற பவுலருக்கு அதிக வேகம் உள்ளது. அவர் நன்றாக பவுன்சரையும் வீச முடியும். அவர் யார்க்கரை தவறவிட்டால் பேட்ஸ்மேன் அதை சிக்சர் போன்ற பெரிய ஷாட் அடிக்க வாய்ப்பு உள்ளது'' என்று கூறினார்.