பேட்டிங், பீல்டிங்கில் சிஎஸ்கே படுமோசமாக இருக்கிறது. பவுலிங்கில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. சிஎஸ்கேவின் கோட்டையான சென்னை சேப்பாக்கத்தில் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அணிகள் துணிச்சலுடன் இளம் வீரர்களை களமிறக்கி வெற்றி வாகை சூடும் நிலையில், சிஎஸ்கே அணியோ அதிரடி ஆட முடியாத அனுபவ வீரர்களை வைத்து தடுமாறி வருகிறது.
சிஎஸ்கேவில் அனுபவ வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி என அனுபவ வீரர்கள் அனைவரும் கடுமையாக சொதப்பி வருகின்றனர். வெளியே அன்ஷுல் காம்போஜ், ஆண்ட்ரே சித்தார்த், வான்ஷ் பேடி என திறமையான இளம் வீரர்கள் இருக்கும் நிலையில், சிஎஸ்கே இவர்களை அணியில் எடுக்க மறுக்கிறது. 6 போட்டிகள் முடிந்த நிலையில், நேற்றைய போட்டியில் தான் அன்ஷுல் காம்போஜ் அணியில் எடுக்கப்பட்டார். மற்ற இளம் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
IPL: குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவு! அதிரடி வீரர் விலகல்! மாற்று வீரர் யார்?