இதேபோல் முகமது ஷமிக்கு ஓய்வளித்து விட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக அர்ஷ்தீப் சிங் 2வது போட்டியில் விளையாடுவார். மேலும் ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு ஓய்வளித்து விட்டு, இங்கிலாந்து டி20 தொடரில் கலக்கிய தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி உள்ளே கொண்டு வரப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
வருண் சக்கரவர்த்தியை சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால், அதற்கு முன்னதாக 2 ஓடிஐ போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது.
2வது ஓடிஐக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
ஷ்ரேயாஸ் மாஸ் கம்பேக்; ஜடேஜா ரிக்கார்டு; முதல் ஓடிஐயில் இந்தியாவின் பலம்? பலவீனம் என்ன?