இந்திய அணி சூப்பர் பார்ம்
இதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிவாகை சூடி தொடரை வெல்ல தயாராக உள்ளது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, 2வது போட்டியின் நாயகன் திலக் வர்மா ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதே வேளையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேபோல் ஹர்திக் பாண்ட்யாவும் பேட்டிங்கும் மெச்சும்படி இல்லை. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் தவிர மற்ற அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள்.
ஆனால் பேட்டிங் மோசமாக இருக்கிறது. கேப்டன் ஜோஸ் பட்லர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய ஸ்பின்னர்களை கணிக்க முடியாமல் தடுமாறி வருவது பின்னடைவாக அமைந்துள்ளது.
'பிசிசிஐ தேர்வுக்குழுவில் இருக்க விரும்ப மாட்டேன்'; காரணத்தை சொன்ன அஸ்வின்!