பேட்டிங் யூனிட் சொதப்பல்
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதார் என அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதே வெற்றிக்கு முதன்மையான காரணமாகும். ஏற்கெனவே மழை பெய்து பந்து நின்று வந்த நிலையில், சூழநிலைக்கேற்ப ஆடாமல் அவசர கதியில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டிம் டேவிட் மட்டும் அந்த 50 ரன்கள் அடிக்கவில்லை என்றால் ஆர்சிபி நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும்.
தேவ்தத் படிக்கல் ஏன் இல்லை?
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியில் இடதுகை ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்படவில்லை. இது ஒரு தவறான முடிவாக அமைந்து விட்டது. நேற்று ஆர்சிபியில் குர்னால் பாண்ட்யாவை தவிர இடதுகை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டு இருந்தால் பஞ்சாப் கிங்ஸ்ஸின் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இருப்பார். மேலும் மெதுவான ஆடுகளத்தில் மிகவும் சரியான பேட்ஸ்மேனாக இருந்திருப்பார்.