தென்னாப்பிரிக்க அதிரடி வீரரால் கோடிகளை இழந்த நிதிஷ் குமார் ரெட்டி; என்ன நடந்தது தெரியுமா?

Published : Dec 29, 2024, 10:15 AM IST

ஐபிஎல் ஏலத்தில் ஹென்ரிக் கிளாசனுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டதால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சில கோடிகளை குறைத்து வழங்கியுள்ளது. 

PREV
14
தென்னாப்பிரிக்க அதிரடி வீரரால் கோடிகளை இழந்த நிதிஷ் குமார் ரெட்டி; என்ன நடந்தது தெரியுமா?
Nitish Kumar Reddy

நிதிஷ் குமார் ரெட்டி சூப்பர் இன்னிங்ஸ் 

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தியா 221/6 என தடுமாறிய நிலையில் 8வது இடத்தில் களமிறங்கிய 21 வயதான இளம் வீரர்  நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர்களின் பந்துகளை விளாசித் தள்ளி அதிரடி சதம் விளாசி அணியை மீட்டார்.

தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி இப்போது உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறி விட்டார். இதனால் 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவரும் உற்று நோக்கும் வீரராக நிதிஷ் குமார் ரெட்டி கண்டிப்பாக இருப்பார். ஆனால் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நிதிஷ் குமார் ரெட்டி, தென்னாபிரிக்க அதிரடி வீரரால் பல கோடி ரூபாயை இழந்தது உங்களுக்கு தெரியுமா?

24
Sunrisers Hyderabad

ரூ.6 கோடிக்கு தக்க வைப்பு 

அதாவது முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் கடந்த ஐபிஎல் சீசனில் நிதிஷ் குமார் ரெட்டியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் இரண்டு அரைசதத்துடன் 303 ரன்கள் எடுத்த நிதிஷ் குமார் ரெட்டி, 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். இதனால் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ.6 கோடிக்கு தக்க வைத்தது.

இந்த ஏலம் நடப்பதற்கு முன்பாக, நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்திய அணியில் இடம்பிடித்ததன் காரணமாகவும், டி20 போட்டிகளில் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாகவும் அவர் ஏலத்தில் ரூ.10 கோடிக்கு மேல் எளிதாக செல்வார் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ரூ.6 கோடிக்கு தக்கவைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

'நீ இன்னும் வளரணும் தம்பி'; தனது பந்தை விளாசிய கான்ஸ்டாஸ் விக்கெட்டை சொல்லி வைத்து எடுத்த பும்ரா!

34
Nitish Kumar Reddy IPL

கூடுதல் தொகை ஒதுக்க முடியவில்லை

முதலில் சன்ரைசர்ஸ் அணி நிதிஷ் குமார் ரெட்டியை ரூ.11 கோடிக்கு தக்க வைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிக் கிளாசனை தக்க வைப்பதற்கு ரூ.23 கோடி செலவிட்டதால் ஹைதராபாத் அணியால் ரெட்டிக்கு கூடுதல் தொகையை ஒதுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கைவசம் இருந்த ரூ.119 கோடியில், ஹென்ரிக் கிளாசன் (ரூ.23 கோடி), கேப்டன் பேட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி) என 4 பேருக்கும் ரூ.69 கோடி செலவிட்டதால் மீதமிருக்கும் தொகையை வைத்தே மற்ற வீரர்களை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. 

44
heinrich klaasen

ஹென்ரிக் கிளாசனால் கோடிகள் இழப்பு 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிக் கிளாசனை நான்கு அல்லது ஐந்து கோடிகள் குறைத்து வாங்கி இருந்தால் மிச்சமிருக்கும் அந்த தொகை நிதிஷ் குமார் ரெட்டிக்கு சென்று அவர் ரூ.10 அல்லது ரூ.11 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு இருப்பார். ஆனால் சிறந்த அதிரடி வீரரான ஹென்ரிக் கிளாசனை எந்த விலை கொடுத்தாவது எடுக்க வேண்டும் என்பதில் ஹைதராபாத் உறுதியாக இருந்ததால், கிளாசனால் நிதிஷ் குமார் ரெட்டி சில கோடிகளை இழந்து விட்டார்.

ஆஸி. மண்ணில் சாதித்த முதல் இந்தியர்; கபில்தேவின் 2 சாதனையை தூள் துளாக்கிய பும்ரா; என்ன தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories