இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஸ்வின், ''ஏலத்தில் விற்கப்படாத போதிலும், திறமையான வீரர்களைத் தேடிப் பிடிப்பதில் சிஎஸ்கே எப்போதும் கில்லாடி என்பதை இது நிரூபிக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார். ஆயுஷ் மாத்ரே தொடக்க வீரராக அறியப்பட்டாலும், வர்தக் மிடில் ஆர்டரில் வந்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, சிஎஸ்கேவுக்கு இவரைப் போன்ற ஒரு "Impact Player" தேவைப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மோதல்
ஆயுஷ் வர்தக் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் சோதனைகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சிஎஸ்கே அணியில் இவர் இடம் பெற்றால், அது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமையும்.
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.