மகளிர் T20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில், இந்திய அணி நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மாவின் ஆல்-ரவுண்ட் ஆட்டம், ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி அரைசதம், ஸ்ரீ சரணியின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்மிருதி (74), ஷஃபாலி (55) ஆகியோரின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இது T20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணியை ஸ்ரீ சரணி (4/19), ஷஃபாலி (3/20), நந்தினி (2/22) ஆகியோர் பவுலிங்கில் மிரட்டினர். இதனால், ஒரு கட்டத்தில் 96/4 என இருந்த நெதர்லாந்து அணி, 114 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 4 புள்ளிகளுடன் குரூப் A-வில் முதலிடத்தில் உள்ளது.