ஈடன் கார்டன்ஸில் தொடங்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் ஷமி இந்திய அணியில் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோகித், ஷமியின் முழங்காலில் வீக்கம் இருப்பதாகக் கூறினார்.
ஆனால், அதன் பிறகு காலில் கட்டுடன் வலைப்பயிற்சியில் சில வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு ஷமி பந்துவீசுவது காணப்பட்டது. பின்னர், குருகிராமில் (Gurugram) நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷமி கலந்து கொண்டார்.
விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷமி
அப்போதும் அவர் ஃபிட்டாகவே காணப்பட்டார். ஆனால் இந்திய அணி நிர்வாகத்தின் கால அடிப்படையில் உடற்தகுதியை பெற ஷமி முயற்சிக்கவில்லை. பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்பு ஷமி முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்பியது.
ஆனால் அவர் மறுவாழ்வு மையத்தில் இருப்பதற்குப் பதிலாக, பல்வேறு தயாரிப்புகளின் விளம்பரப் படப்பிடிப்புகள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுவே அணி நிர்வாகம் அவர் மீது அதிருப்தி அடையக் காரணம்.