கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்த போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சுனில் கவாஸ்கரை, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். ஆனால், பந்து பேட்டில் பட்டது என்பதில் சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாக இருந்த நிலையில், நடுவரின் தவறான முடிவால் கோபத்துடன் வெளியேறினார். அப்போது, டென்னிஸ் லில்லி வம்பிழுக்கும் வகையில் எதை எதையோ சொல்ல, ஆத்திரமடைந்த சுனில் கவாஸ்கர் தனது பார்ட்னரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார். அதன் பிறகு சமாதானம் செய்து வைத்து பின்னர் போட்டி மீண்டும் தொடர்ந்தது.