இது தொர்பாக வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம். சுந்தர் கூறுகையில், “வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். ஆனால், அவரது ஆட்டத்தை யாரும் கவனிப்பதோ, பேசுவதோ இல்லை. மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ஆனால் என் மகனுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் செய்தது போல, வாஷிங்டன் ஐந்தாவது இடத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
மேலும், தொடர்ச்சியாக ஐந்து முதல் பத்து போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். முதல் டெஸ்டில் அவரை விளையாட வைக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. தேர்வாளர்கள் அவரது ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்” என்றார்.