ஹரியானா தேர்தல்:
ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போது வீரேந்திர சேவாக்கின் பிரச்சாரத்தால், தோஷம் தொகுதியில் அனிருத் சவுத்ரி பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் சேவாக்கும் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. களத்தில் பேட்டால் பேசி வந்த சேவாக், தற்போது வார்த்தையால் வித்தைகாட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆதலால் தோஷம் தொகுதியில் அனிருத் சவுத்ரி வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவாக் கிரிக்கெட் வாழ்க்கை:
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சேவாக் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்காக 374 சர்வதேச போட்டிகளில் விளையாடி 38 சதங்களுடன் 17,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.