இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்று பேசிய விராட் கோலி, நான் மிகக்கடுமையாக உழைத்தேன். நேற்று(போட்டிக்கு முந்தைய நாள்) 90 நிமிடங்கள் வலையில் விடாமல் பேட் செய்தேன். அதன்விளைவாக மிகவும் ரிலாக்ஸாக களமிறங்கினேன். ஷமியின் முதல் பந்தை அடித்தபோதே, லெந்த் பந்துகளை ஃபீல்டர்களின் தலைக்கு மேல்(பவர்ப்ளேயில்) அடிக்கமுடியும் என நம்பினேன். இந்த சீசனில் எனக்கு கிடைத்த ஆதரவு மிகச்சிறப்பானது. என் மீது காட்டப்பட்ட அன்பு, இதற்கு முன் நான் பார்த்திராதது என்று கோலி தெரிவித்தார்.