தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் நடந்த இந்த ரன் குவிப்பு போட்டியில், RCB அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் PBKS அணியை வீழ்த்தியது. இதன் மூலம், 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்காக இம்பேக் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 73 ரன்கள் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
வெங்கடேஷ் ஐயர் விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்
இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் லோகி பெர்குசன் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அரைசதத்தை கடந்த வெங்கடேஷ் ஐயர், கைகளை உயர்த்தி சைகையை காட்டி கொண்டாடினார். இந்த ஸ்டைல் அப்படியே நடிகர் விஜய் (தற்போதைய தமிழக முதல்வர்) நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் வரும் மாஸ் மேனரிசத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. இதனால், தளபதி விஜய்யின் ரசிகர்கள் "ஐபிஎல் அரங்கில் விஜய் ஃபீவர்" என இதைக் கொண்டாடி, வீடியோக்களை வைரல் செய்து வருகின்றனர்.