இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?

Published : Feb 26, 2026, 03:22 PM IST

ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரருக்கான விருதை வென்றார். இதற்காக அவருக்கு டாடா நிறுவனத்தின் கார் பரிசாக வழங்கப்பட்டது.

PREV
14
டாடா மோட்டார்ஸ் பரிசளிப்பு

ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார். வெறும் 7 போட்டிகளில் 252 ரன்கள் சேர்த்ததோடு, 206.55 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரெட்டையும் பதிவு செய்தார். குறைந்த போட்டிகளில் இப்படியான தாக்கம் செலுத்தியது ரசிகர்களையும் கிரிக்கெட் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

24
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி

இந்த சிறப்பான செயல்திறனுக்காக, ஐபிஎல் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரருக்கான விருதாக டாடா நிறுவனத்தின் ‘கர்வ்’ கார் அவருக்கு வழங்கப்பட்டது. இளம் வயதிலேயே இப்படியான பெரிய பரிசை பெற்றது வைபவின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என பார்க்கப்படுகிறது.

34
வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்ட டாடா கார்

பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய ஷோரூமை திறந்து வைத்த பின்னர் அவர் இந்த காரை பெற்றுக்கொண்டார். அந்த தருணத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். அவரது சாதனை பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

44
இளம் வயதில் பெரிய வெற்றி

ஐபிஎல் 2026க்கு தயாராகும் வைபவ், இந்தியா ஏ அணிக்காக விளையாடிய பின் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த சீசனிலும் அவர் அதிரடி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இளம் வயதில் கிடைத்த இந்த அங்கீகாரம், கடின உழைப்பும் திறமையும் இருந்தால் பெரிய மேடைகளில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories